← முகப்பு செய்திகள்

MS Dhoni: Chennai Super Kings fans are in a frenzy following Ravichandran

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
MS Dhoni: Chennai Super Kings fans are in a frenzy following Ravichandran

சென்னை: 2026 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தோனியின் ஆட்டம், மே 18 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அந்தப் போட்டி, தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடும் முதல் போட்டியாக மட்டுமின்றி, ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சீசன் தொடங்கியது முதல் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, நாளை மறுதினம் (மே 18) ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்க 'அதிக வாய்ப்பு' இருப்பதாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அஸ்வின், "தோனி கடந்த 2 முதல் 3 போட்டிகளாகவே விளையாடும் அளவிற்குத் தயாராக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடப் பலமான வாய்ப்புகள் உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

MS Dhoni Likely to Return at Chepauk Against SRH Ravichandran Ashwin Shares Major Update

2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பயிற்சியின் போது தோனிக்குக் கெண்டைக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. வெறும் 2 வாரங்களில் அவர் சரியாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 2 மாதங்களாக அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அணியின் ஆலோசகர் போலச் செயல்பட்டு வந்த தோனி, தற்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில், தோனி பேட்டிங் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓடி ரன்களை எடுப்பதில் மட்டும் சிறிய சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சிஎஸ்கே அணி முந்தைய போட்டியில் லக்னோவிடம் தோல்வியடைந்ததால், பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க இனி வரும் 2 போட்டிகளிலும் வென்றே தீர வேண்டும். இக்கட்டான இந்தச் சூழலில், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்கத் தோனி போன்ற ஒரு அனுபவ வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார்.

IPL 2026: “சிஎஸ்கே கேப்டன் செய்த இந்த தவறுதான் தோல்விக்கு காரணம்”.. ருதுராஜ் மீது பாய்ந்த பத்ரிநாத்

மேலும், மே 18-ம் தேதி நடைபெற உள்ள இந்தப் போட்டி தான் இந்தச் சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் ஆட்டமாகும். ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினால், இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாகவும் அமைய வாய்ப்புள்ளது. இதனால், தனது விருப்ப மைதானமான சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு விடை கொடுக்கும் வகையில் தோனி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் கொடுத்துள்ள இந்த 'க்ளு' சென்னை ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில்
செய்திகள் · 26 நிமிடங்கள் முன்னர்
3
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே சூடுபிட
தலையங்கம் · 38 நிமிடங்கள் முன்னர்
4
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
5
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
6
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net