← முகப்பு செய்திகள்

IPL 2026: RCB Captain Rajat Patidar says they don't deserve to win

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 27 பார்வைகள்
IPL 2026: RCB Captain Rajat Patidar says they don't deserve to win

ராய்ப்பூர்: 2026 ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடத்திற்கு முன்னேறியுள்ள போதிலும், அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் ஆட்டம் முடிந்த பின் பேசிய கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் அல்ல” என அவர் ஏன் கூறினார் என்பதையும், அந்த கடைசி ஓவர் பரபரப்பையும் விரிவாகப் பார்ப்போம்.

ராய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பவர் பிளே முடிவதற்குள்ளேயே விராட் கோலி உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி தடுமாறியது.

IPL 2026 RCB Captain Rajat Patidar says they don t deserve to win despite After Last-Ball Thriller Against MI

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி அணியை மீட்டார். காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலியால் துடித்த போதிலும், மைதானத்தில் நங்கூரம் போல நிலைத்து நின்ற அவர் 46 பந்துகளில் 73 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இருப்பினும், கடைசி ஓவரில் ஆட்டம் மீண்டும் மும்பை பக்கம் திரும்பியது. கடைசி 3 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கு ஆர்சிபி முன்னே நின்றது.

அப்போது புவனேஸ்வர் குமார் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் பந்திலேயே ஒரு பிரம்மாண்ட சிக்சரை பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் அமர்ந்தது. அதேசமயம், இந்தத் தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டது.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் கூறுகையில், "உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. எங்களிடம் இருக்கும் பலமான பேட்டிங் வரிசைக்கு இந்த இலக்கை மிக எளிதாக எட்டியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் தேவையில்லாமல் போட்டியை கடைசி வரை கொண்டு சென்றுவிட்டோம். க்ருணால் பாண்டியாவின் அபாரமான ஆட்டம் தான் எங்களைக் காப்பாற்றியது. இக்கட்டான நேரத்தில் புவனேஸ்வர் குமார் அடித்த சிக்சர் வெற்றியை உறுதி செய்தது" என வெளிப்படையாகப் பேசினார்.

IPL 2026: கடைசி பந்தில் ஆர்சிபி திரில் வெற்றி.. தொடரை விட்டு வெளியேறியது மும்பை அணி

முக்கியமான போட்டிகளில் ஆர்சிபி அணி பேட்டிங்கில் தடுமாறுவது அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடைசி பந்து வெற்றி அந்த அணிக்கு உற்சாகத்தைத் தந்தாலும், இனி வரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம். ஆர்சிபி தனது அடுத்த போட்டியில் மே 13 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை ஆர்சிபி இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net