← முகப்பு செய்திகள்

IPL 2026- Ashwin Backs Bhuvneshwar Kumar For India T20 Team Return After

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
IPL 2026- Ashwin Backs Bhuvneshwar Kumar For India T20 Team Return After

ராய்ப்பூர்: புவனேஷ்வர் குமாரை மீண்டும் இந்திய டி20 அணியில் சேர்க்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஆதரவு தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகஆர்சிபி பெற்ற வெற்றிக்கு புவனேஷ்வரின் சிறப்பான பங்களிப்பு இதற்கு காரணமாகும்.

ராய்ப்பூரில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இரண்டு விக்கெட் வெற்றிக்கு புவனேஷ்வர் குமார் முக்கிய பங்காற்றினார். 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சேசிங்கின் கடைசி ஓவரில் ஒரு முக்கியமான சிக்ஸரையும் அடித்து அசத்தினார். அவரது ஆல்-ரவுண்ட் செயல்திறன் பரவலான பாராட்டுகளைப் பெற்றதுடன், இந்திய கிரிக்கெட்டில் இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்று அஷ்வின் வலியுறுத்தினார்.

ஜியோஸ்டார் அளித்த பேட்டியில் அஷ்வின், "#BringBackBhuvi என்ற ஹேஷ்டேக்கை நான் ஆதரிக்கிறேன். டி20 அணியில் அவர் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். புதிய பந்தில் துல்லியமாகப் பந்து வீசுவது, டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது, அழுத்தமான சூழ்நிலையில் சிக்ஸர் தேவைப்பட்டால், மைதானத்தின் கடினமான பகுதிகளிலும் அதை அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது" என்று கூறினார்.

IPL 2026: சிஎஸ்கே வீரர் அதிரடியை டிவியில் காண பயிற்சியை நிறுத்திய விராட் கோலி.. வைரல் வீடியோ

"பிட்ச்சில் சாதகமான அம்சங்கள் இருப்பதை உணர்ந்தபின், அது உண்மையான டெஸ்ட் பந்துவீச்சாக இருந்தது. ஒரு தொடக்க ஆட்டக்காரரை தொடர்ந்து சோதிப்பார் அவர். ரோகித் சர்மாவை அந்த அற்புதமான ஸ்லோ பாலில் அவுட் செய்தது நம்ப முடியாதது" என்று அஷ்வின் வியந்தார். மேலும், நான்காவது விக்கெட்டை எடுக்க வாய்ப்பிருந்தும், சுயநலமின்றி யார்க்கர்களைத் துல்லியமாக வீசியதால், புவனேஷ்வருக்காக தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், குருணல் பாண்டியாவுக்கும் சிறப்புப் பாராட்டுத் தெரிவித்தார். சேசிங்கின் ஆரம்ப சரிவுக்குப் பிறகு, அழுத்தமான சூழ்நிலையில் நிதானமாக 73 ரன்கள் குவித்து ஆர்சிபி-யை அவர் மீட்டார். "நாம் மனித வள மேலாளர்கள் மற்றும் திட்ட மேலாளர்களை அறிவோம், ஆனால் இது உண்மையான 'அழுத்த மேலாண்மை'. ஒருவர் தேவைப்பட்டால், குருணல் பாண்டியாவை அழைக்கலாம்" என்று அஷ்வின் புகழாரம் சூட்டினார்.

IPL 2026: கடைசி பந்தில் ஆர்சிபி திரில் வெற்றி.. தொடரை விட்டு வெளியேறியது மும்பை அணி

ரொமாரியோ ஷெப்பர்டின் நிலையற்ற செயல்திறன் குறித்து சில கவலைகள் இருந்தாலும், ஆர்சிபி அணி நல்ல நிலையில் இருப்பதாக அஷ்வின் தெரிவித்தார். இவர் மீது பொறுமையுடன் இருக்குமாறு சாம்பியன் அணிக்கு அவர் அறிவுறுத்தினார். ஷெப்பர்டின் போட்டி வெல்லும் திறன், பின்னர் போட்டியில் பயனுள்ளதாக அமையும் என்றும் அஷ்வின் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net