Homeசெய்திகள்

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பிரதான மத்திய நிலையம் திறப்பு

இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அதேவேளை புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதா

வடக்கு, கிழக்கு உத்தேச அபிவிருத்தி வேலைத்திட்டம்- அமைச்சரவை அங்கீகாரம்
யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு
பாகிஸ்தானில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் பட்டத் விழா
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்
நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!


இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அதேவேளை புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான இலங்கையின் பிரதான மத்திய நிலையம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய நிலையம் வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) உள்ள தொற்றுநோய் சிகிச்சை கிளினிக் கட்டிடத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ளது.
அடையாளம் காணப்படும் நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக உடனடியாக நிபுணர் கிளினிக்குகளுக்கு பரிந்துரைக்கும் முறைமையும் இந்த வசதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மத்திய நிலையம், அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்த்து, வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
2 குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்!
குருணாகலை – பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (10)  பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவலில்,  தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.