Homeசெய்திகள்

மலையக மக்களுக்கு முன்னுரிமையளிப்பது அவசியம் – ஐ.நா பிரதிநிதி வலியுறுத்தல்

‘டித்வா’  பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்க

குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம் மறுபரிசீலனை – அரசாங்கம் முடிவு
அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்படும் என்று மக்ரோன் எச்சரிக்கிறார்
கொஸ்கம விபத்தில் பலர் காயம்
ஒரே டி.என்.ஏ கொண்ட இரட்டைச் சகோதரர்களால் பிரான்ஸ் கொலை வழக்கு விசாரணை சிக்கலானது
நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!


‘டித்வா’  பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வது அவசியம் என்றார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியினால் மலையக பகுதிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் பதுளை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு களநிலைவரங்களைப் பார்வையிட்டதன் பின்னர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.