சம்மாந்துறையில் உள நல பிரிவு கட்டிடம் திறந்து வைப்பு !

by admin

சம்மாந்துறையில் உள நல பிரிவு கட்டிடம் திறந்து வைப்பு !

(எம்.எம்.றம்ஸீன்)

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உள நல பிரிவுக்கான சமூக சுகாதார மையத்தின் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி ஸகீலா இஸ்ஸதீன் ,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,கல்முனை பிராந்திய உள நல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே நெளபல்,மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.ஏ கபூர்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உள நல வைத்தியர் டொக்டர் கசூன் கடுவெல,சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம் நெளபர்,வைத்தியர்கள் ,தாதி உத்தியோஸ்தர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த மீன் தொட்டியானது புனரமைக்கப்பட்டு அதனுள் நுளம்புக் குடம்பிகளை உண்ணக்கூடிய கப்பீஸ் மீன்கள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

தொடர்புடைய செய்திகள்