‘தேவைகளைத் தேடி மக்களுடன் நாம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் தெரு விளக்குகள் மக்களிடம் கையளிப்பு

by admin

‘தேவைகளைத் தேடி மக்களுடன் நாம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் தெரு விளக்குகள் மக்களிடம் கையளிப்பு (சித்தா)

மட்டக்களப்பு புதுமுன்மாரிச்சோலை கிராம மக்கள் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இன்று 07.05.2024 ‘தேவைகளைத் தேடி மக்களுடன் நாம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் கட்சியின் நிதியில் இருந்து ஒரு தொகை தெரு விளக்குகள் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஆலய அறங்காவல் சபையிடம்; கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன், போரதீவுப்பற்று பிரதேசக் குழு செயலாளர் கோபாலன் பிரசாத், கட்சியின் உறுப்பினர்களுடன் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்