பேத்தியை காப்பாற்ற முயன்ற மூதாட்டி முச்சக்கரவண்டியில் மோதி பலி !

by admin

பேத்தியை காப்பாற்ற முயன்ற மூதாட்டி முச்சக்கரவண்டியில் மோதி பலி !

முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற மூதாட்டி அதே முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற பேத்தியை அழைத்துவரும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்