வாதுவை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல் !

by admin

வாதுவை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல் ! on Saturday, May 04, 2024

வாதுவை, மொல்லிகொட பிரதேசத்தில் இன்று (4) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணாடி போத்தல் ஒன்றினால் தனது மனைவியைத் தாக்கி காயப்படுத்திய சந்தேக நபரொருவரை கட்டுப்படுத்த முயன்ற போது பொலிஸாரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவை, மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவத்தின் போது இவர் கண்ணாடி போத்தல் ஒன்றினால் தனது மனைவியைத் தாக்கிக் காயப்படுத்திக்கொண்டிருந்துள்ள நிலையில், பிரதேசவாசிகள் மூலம் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது, அங்கிருந்த பொலிஸார் சந்தேக நபரைக் கட்டுப்படுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட போதும் சந்தேக நபர் கட்டுப்படாததால் வேறு வழியின்றி அவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வாதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்