சைவப்புலவர் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !

by admin

சைவப்புலவர் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு ! on Saturday, May 04, 2024

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைகள் வைகாசி மாதம் 24,25,26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார் .

மேற்படி பரீட்சைகள் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு உரைநடை பிற்பகல் 2 மணிக்கு வரலாறு 25 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு இலக்கியம் பிற்பகல் 2 மணிக்கு இலக்கணம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு சாத்திரம் ஆகிய பாடங்கள் இடம்பெறவுள்ளது.

பரீட்சைகள் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகாவித்தியாலயம் மட்டக்களப்பு ஆணைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி ஆகிய பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் வைகாசி 2 ஆம் வாரம் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்