மாடுகளைத் திருடிய நால்வர் போதைப்பொருளுடன் கைது !

by admin

மாடுகளைத் திருடிய நால்வர் போதைப்பொருளுடன் கைது ! on Wednesday, May 01, 2024

லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்கு உபட்ட பகுதியில் 12 இலட்சம் ரூபா பெறுமதியான 7 மாடுகளைத் திருடியதாகக் கூறப்படும் நால்வர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லுணுகம்வெஹெர , உடவலவ மற்றும் பல்லேபெத்த ஆகிய பிரதேசங்களில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் லுணுகம்வெஹெர , உடவலவ மற்றும் பல்லேபெத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29, 30, 41 மற்றும் 53 வயதுடையவர்களாவர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாடுகளை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேனொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்