வாகன இறக்குமதி தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பம் !

by admin

வாகன இறக்குமதி தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பம் ! on Sunday, April 28, 2024

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை குறித்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனிடையே, வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்