தங்க மூலாம் பூசப்பட்ட கட்டியுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது !

by admin

தங்க மூலாம் பூசப்பட்ட கட்டியுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது ! on Sunday, April 28, 2024

கிளிநொச்சியில் 4 கிலோ கிராம் தங்க மூலாம் பூசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமருகில் இரவு 11.00 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது காரில் மறைக்கப்பட்ட நிலையில் தங்க மூலாம் பூசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டியை மீட்டுள்ளனர்.

வவுனியா நோக்கி இதனை கடத்த முற்பட்ட போதே அது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட காரும் அதன் சாரதி மற்றும் இரு பெண்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்