← முகப்பு தலையங்கம்

“ஸ்டாலின் டெல்லியில் சென்று போட்டியிடப் போகிறாரா? ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது மக்களுக்கு

🕐 23 Feb 2026 📂 தலையங்கம் 68 பார்வைகள்
“ஸ்டாலின் டெல்லியில் சென்று போட்டியிடப் போகிறாரா? ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது மக்களுக்கு

“ஸ்டாலின் டெல்லியில் சென்று போட்டியிடப் போகிறாரா? ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான நேரடி அரசியல் போராக மாறும் என்று விஜய் தெரிவித்தார்.

வேலூரில் இன்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்களை உண்மையாக நேசிக்கும் நல்ல தலைமை இல்லாத காரணத்தால், மு.க. ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார். இதனை மாற்றும் நோக்கில் சரியான நேரத்தில் வெகுஜன இயக்கமாக தவெக உருவெடுத்துள்ளதாகவும், தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக சென்று மக்களை சந்திப்பேன் என்றும் உறுதியளித்தார்.

இந்த தேர்தலை திமுக, “தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல்” என கூறி வருவதாக குறிப்பிட்ட விஜய், “ஸ்டாலின் டெல்லியில் சென்று போட்டியிடப் போகிறாரா? ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள்” என்று விமர்சித்தார்.

மேலும், “இந்த தேர்தல் உண்மையில் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சத்துக்குமான போர். தமிழ்நாட்டுக்கும் திமுக ஆட்சிக்குமான போர். விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போர். அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை எதிர்க்கின்றனர். நான் மக்களோடு மக்களாக நிற்பதால்தான் இத்தகைய எதிர்ப்புகள். திமுகவும் தவெகவும் இடையேதான் உண்மையான போட்டி நடைபெறுகிறது” என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அந்த நள்ளிரவு நேரம், இங்கிலாந்தின் டெவன் (Devon) கவுண்டியில் உள்ள சௌர்டன் டவுன் (Sourton Down)
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net