← முகப்பு தலையங்கம்

ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்கள் திருமணத

🕐 23 Feb 2026 📂 தலையங்கம் 74 பார்வைகள்
ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்கள் திருமணத

ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடிகளாகக் கருதப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

'கீதா கோவிந்தம்' படத்தில் இணைந்தபோது தொடங்கிய இவர்களது நட்பு, காதலாக மலர்ந்ததாக நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டது. ரகசிய டேட்டிங் மற்றும் சுற்றுலா புகைப்படங்கள் மூலம் ரசிகர்களால் 'VIROSH' என அழைக்கப்பட்ட இந்த ஜோடி, இதுவரை தங்கள் உறவு குறித்து மௌனம் காத்தே வந்தனர்.

சமீபத்தில் ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், திருமண அழைப்பிதழ் கசிந்ததாகவும் வெளியான செய்திகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவின. இத்தகைய சூழலில், ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்கள், "நாங்கள் முடிவெடுப்பதற்கு முன்பே எங்களை ஆசீர்வதித்து, 'VIROSH' என்ற பெயரையும் சூட்டிய ரசிகர்களுக்கு நன்றி. உங்கள் அன்பிற்கு மரியாதை அளிக்கும் வகையில் எங்களது இணைப்பை 'VIROSH திருமணம்' என அழைக்க விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பல வருடங்களாக நீடித்த மர்மம் விலகி, இவர்களது திருமணச் செய்தி உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அந்த நள்ளிரவு நேரம், இங்கிலாந்தின் டெவன் (Devon) கவுண்டியில் உள்ள சௌர்டன் டவுன் (Sourton Down)
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net