← முகப்பு பதிவு

யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு சிங்கள கடும் போக்குவாதிகள் சிலர் வந்து

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 98 பார்வைகள்
யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு சிங்கள கடும் போக்குவாதிகள் சிலர் வந்து
தையிட்டியில் முகாமிட்டுள்ள சிங்கள அமைப்புக்கள்

யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு சிங்கள கடும் போக்குவாதிகள் சிலர் வந்து தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் போக்குவாத மூன்று சிங்கள அமைப்புகளின் பிரதிநிதிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.

விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதி காணப்படும் நிலையில் குறித்த வீதியை கடந்த 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு பிரதேச சபை விகாரதிபதிக்கு அறிவித்து இருந்தது. அதன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் , பிரதேச சபையினால் வீதியை மீட்கும் முயற்சி எடுக்கப்படும் என்ற நிலையே சிங்கள அமைப்புக்களை சேர்ந்தவர்கள் வந்து தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை , வீதியை மீட்கும் முயற்சி , இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , சமாதான சீர்குழைவை ஏற்படுத்தும் ஆகவே அதனை நிறுத்த நீதிமன்று தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்

குறித்த வழக்கு மீதான விசாரணை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போது, எதிர்வரும் 21ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்படும் என மன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
5 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net