Homeசெய்திகள்

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பிரதான மத்திய நிலையம் திறப்பு

இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அதேவேளை புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதா

ஒரே டி.என்.ஏ கொண்ட இரட்டைச் சகோதரர்களால் பிரான்ஸ் கொலை வழக்கு விசாரணை சிக்கலானது
டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
மட்டக்களப்பில் பட்டி பட்டியாக உள்நுழைந்த யானைகள்
அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை!
சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்! பனங்காட்டான்


இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அதேவேளை புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான இலங்கையின் பிரதான மத்திய நிலையம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய நிலையம் வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) உள்ள தொற்றுநோய் சிகிச்சை கிளினிக் கட்டிடத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ளது.
அடையாளம் காணப்படும் நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக உடனடியாக நிபுணர் கிளினிக்குகளுக்கு பரிந்துரைக்கும் முறைமையும் இந்த வசதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மத்திய நிலையம், அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்த்து, வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
2 குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்!
குருணாகலை – பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (10)  பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவலில்,  தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.