போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் துபாயில் கைது
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் துபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வரும் பாரிய கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது.
ஈரானிய போதைப்பொருள் வலையமைப்புடன் கொண்டிருக்கும் தொடர்பு காரணமாக இவர் அமெரிக்காவாலும் தேடப்படும் ஒரு நபராக கருதப்படுகிறார்.