← முகப்பு பதிவு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில் பாரிய ஊழல நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 116 பார்வைகள்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில் பாரிய ஊழல நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்
மகிந்த தரப்பிற்கு எதிராக சந்திரிகா களமிறக்கம்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில் பாரிய ஊழல நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ராஜபக்சர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் மின்சக்தி நெருக்கடி மற்றும் நுரச்சோலை அனல்மின் நிலைய நிர்மாணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வெளியிடுகையில் தனது ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை, தனக்குப் பின் வந்த அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பது குறித்து அவர் விவரித்துள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் 280 மில்லியன் டொலர் மதிப்பீட்டில் கையெழுத்திடப்பட்ட திட்டம், பின்னர் வந்த ஆட்சியாளர்களால் முறைகேடாக 520 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் மொத்த மதிப்பில் 50 சதவீதத்தை தரகுக் கட்டணமாக ஒரு தரப்பினர் கோரியதாகவும், சீன நிறுவனம் அதற்கு இணங்காததால் அந்த நிறுவனத்தை வெளியேற்றிவிட்டு, அனுபவமற்ற ஒரு புதிய நிறுவனத்திடம் அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

அன்று நடந்த இத்தகைய பாரிய நிதி மோசடிகளே இன்று நாடு எதிர்கொள்ளும் தொடர் மின்வெட்டு மற்றும் பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் விமான கொள்வனவு ஊழல் தொடர்பில் மகிந்த கைதாகலாமென்ற எதிர்பார்ப்பில் கொழும்பில் ஆதரவாளர்கள் திரண்டிருந்த நிலையில் சந்திரிகா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். .

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net