← முகப்பு பதிவு

தங்களுடைய சுய நலத்திற்காக, அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாதத்திற்காகவும் மக்களைக் கொல்வது என்பது மிகவும் ஒரு

🕐 11 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 8 பார்வைகள்
தங்களுடைய சுய நலத்திற்காக, அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாதத்திற்காகவும் மக்களைக் கொல்வது என்பது மிகவும் ஒரு
ஈஸ்டர் தாக்குதல்:சுயநல அரசியலில்?

தங்களுடைய சுய நலத்திற்காக, அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாதத்திற்காகவும் மக்களைக் கொல்வது என்பது மிகவும் ஒரு காட்டு மிராண்டித்தனமான ஒரு செயல் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (10) ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் ஈஸ்டர் தாக்குதல் என்பது திட்டமிட்ட முறையில் நடந்தது உலகறிந்த உண்மை. இலங்கையில் இருக்கும் எல்லோரும் அறிந்த உண்மை.

ஆகவே, அதைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் .அதனாலேயே இனங்களுக்கு இடையே ஏற்படுகின்ற அந்த இன மோதல்கள், இந்த நல்ல முறையான தீர்ப்புகளை அளித்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நேரத்தில், நிற்கிறோம்.

இலங்கை நாடு என்பது ஒரு சமய, ஆன்மீக வழியிலே வளர்ந்து வருகின்ற ஒரு நாடாக இருப்பதனால், பௌத்த மதம் அழகான சமய, ஆன்மீக சிந்தனை களோடு மக்களை வழிநடத்துகின்ற ஒரு சமயம்.

அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அத்தோடு இஸ்லாமிய சமயம், அத்தோடு சைவ சமயம், அத்தோடு கத்தோலிக்க கிறிஸ்தவ சமயங்கள் எல்லா மக்களை ஒழுக்கத்தோடு வழிநடத்துகின்ற ஒன்றுதான்.

உண்மைக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து சமயங்களும் அதற்கு, இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையைத் தேடி உழைக்கின்ற சமயங்களாக இருக்கிறதே ஒழிய தடையாக இல்லை.

ஆனால், சமயங்களைப் பயன்படுத்தி அதற்கு தடையை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அத்தோடு அரசியலுக்காக உண்மைகளை மறைக்கும் செயலானது, இன்னும் வருங்காலத்தில் மிகப்பெரிய பிளவுகளையும், மிகப்பெரிய பிரச்சினைகளையும், விடிவுக்கு வராத, முடிவுக்கு வராத ஒரு இனப்பிரச்சனையாக வளர்ந்து செல்வதற்கும் மிகவும் உதவியாக இருக்கப்போகிறதெனவும் மார்க்ஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக ஈரான் உறுதியாக நிற்கும் என அதிபர் தெரிவித்துள்ளார்.தனது அமெரிக்க சகாவிடமிரு
3 மணி நேரம் முன்னர்
பதிவு
ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது மாலை 5:15 மணிக்குத் தாக்குதல்கள் தொடங்கின என்று அமெரிக்க
3 மணி நேரம் முன்னர்
பதிவு
யுத்த இறுதிக்காலப்பகுதியான 2008 -2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்; கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
சூரிச் மற்றும் வின்டர்தூர் நகரங்கள் நகராட்சி குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தலாம் என்று கூட்டாட்சி உச்ச நீத
14 மணி நேரம் முன்னர்
பதிவு
கொலை முயற்சி, பொது இடத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய
14 மணி நேரம் முன்னர்
பதிவு
ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இன்று ஈரான் தாக்குதல் நடத்தியதுடன், அமெரிக்காவும்
15 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தில் நடந்த
2
இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்க
3
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் உள்ள நிலையில்,
4
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்களை பார்ப்போ
5
(செ.கவிஷனா)கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம
தமிழ் · 11 Jun 2026
6
(செ.கவிஷனா)ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக சபை
தமிழ் · 11 Jun 2026
7
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 11 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net