← முகப்பு பதிவு

கைது அச்சத்தில் மறைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிரு

🕐 1 நாள்கள் முன்னர் 📂 பதிவு 14 பார்வைகள்
கைது அச்சத்தில் மறைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிரு
கோத்தாவிற்கு சூம்?

கைது அச்சத்தில் மறைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிருந்து சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமலாக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்குத் தொடர்பிலேயே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு 10வருட இழுபறிகளின் பின்னராக காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிருந்து சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, தன்னால் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வரமுடியாது என கோட்டாபய ராஜபக்சவினால் கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் நீண்டகால கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், தற்போது விசேட அனுமதியை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஜேவிபி கட்சிசார்பில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் மர்மமான முறையில் ஆவரங்கால் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு குடும்பத்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்ததால், இந்த வழக்குத் தொடர்பாக அவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
4 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
5 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
5 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
6 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
7 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 34 நிமிடங்கள் முன்னர்
2
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
4
Gajakesari Yoga in June 2026 bring luck and prosperity to these 4
இன்றைய ராசிபலன் · 2 மணி நேரம் முன்னர்
5
Suryakumar Yadav is all set to Removed As India T20 Captain; New
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
6
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
7
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net