ஓபிண் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், உலகின் மிகப் பெரிய பணக்கார தொழில்நுட்பஅதிபர்கள் சிலரை ஒருவருக்கொருவர் எதிராக மோதவிடும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் சாட்சி கூண்டில் ஏறியுள்ளார்.
நேற்று செவ்வாயன்று சாட்சியமளித்த ஆல்ட்மேன், பொது நலனுக்காகப் பணியாற்றுவதே நிறுவனத்தின் ஸ்தாபக நோக்கம் என்ற எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்தான், அந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டினார் என்று ஆல்ட்மேன் கூறினார்.
ChatGPT- ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம், மஸ்க் மற்றும் ஆல்ட்மேன் உள்ளிட்ட பல தொழில்முனைவோர்களால் 2015-ல் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக நிறுவப்பட்டது. அது 2019-ல் ஒரு இலாப நோக்கு துணை நிறுவனத்தை நிறுவியது.
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் உரிமையியல் வழக்கில், ஆல்ட்மேன், ஓப்பன்ஏஐ தலைவர் கிரெக் ப்ராக்மேன் மற்றும் அந்த நிறுவனமே, மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் அதன் அசல் நோக்கத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு இலாப நோக்கு நிறுவனமாக மாறிவிட்டதாக மஸ்க் குற்றம் சாட்டுகிறார்.
தற்போது xAI மற்றும் அதன் க்ரோக் சாட்பாட் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் கால் பதித்துள்ள மஸ்க், அற்பமான பழிவாங்கும் நோக்கத்தால் உந்தப்படுகிறார் என்று OpenAI வாதிடுகிறது.
OpenAI இன் வர்த்தகப் பிரிவின் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்த பின்னரே மஸ்க் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார் என்று அவர்கள் கூறுகின்றனர்.