Homeசெய்திகள்

துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்

இந்​தி​யா​வைச் சேர்ந்த காமினி கண்​ணன் 23 ஆண்​டு​கள் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசித்து வந்​தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்​குத் திரும்​பி​னார

ஜே.வி.பியின் முன்னாள் பா. உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்
மருதனார்மடம் சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டது போலித் துப்பாக்கியாம்! – நபர் கைது
அரசியல் தீர்வு குறித்து சுவிஸ் தலைமையில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தாமதமடைகிறது…
செம்மணி மீள ஆரம்பம்!
அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்படும் என்று மக்ரோன் எச்சரிக்கிறார்


இந்​தி​யா​வைச் சேர்ந்த காமினி கண்​ணன் 23 ஆண்​டு​கள் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசித்து வந்​தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்​குத் திரும்​பி​னார்.
ஒரு திரு​மணத்​தில் கலந்துகொள்​வதற்​காக மீண்​டும் துபாய் சென்​றிருந்​தார். தனது மகன் அபிமன்யு வீட்​டில் தங்​கி​யிருந்தார். அப்போது தங்க நாணயங்கள் கொண்ட பை பழையதாகிவிட்டதால், அதை வேறு ஒரு பையில் மாற்றி டைனிங் டேபிளில் வைத்தார். அந்​தப் பையில் தலா 8 கிராம் எடை​யுள்ள நான்கு 22 காரட் தங்க நாண​யங்​கள் மற்​றும் ஒரு 50 கிராம் 24 காரட் தங்​கக் கட்டி ஆகியவை இருந்​தன.
மறு​நாள் காலை (பிப்​ர​வரி 1) காமினி இந்​தியா திரும்ப வேண்​டிய நிலை​யில், தங்​கம் வைத்​திருந்த பை காணா​வில்லை. விசாரித்த போது அவரது மகன் தவறு​தலாக அந்​தப் பையைக் குப்​பை​யில் வீசி​யது நினை​வுக்கு வந்​தது. குப்​பை​யில் போனால் போனது​தான் என்று கரு​தி, அவர்​கள் காவல் நிலை​யத்​தில் புகார் கூட அளிக்கவில்​லை.
ஆனால், பிப்​ர​வரி 4ம் தேதி அபிமன்யு வசிக்​கும் கட்​டிடத்​தின் காவலா​ளி​ மூலம் அவரை போலீஸார் தொடர்பு கொண்டனர். குப்பை சேகரிக்​கும் தொழிலாளி ஒரு​வர் தங்​கத்​தைக் கண்டெடுத்து, அதை விற்​க முயன்​றுள்​ளார். அங்கு அதி​காரி​கள் விசா​ரித்​த ​போது, அது குப்​பை​யில் கிடைத்​தது தெரிய வந்துள்ளது. அன்று மாலை அபிமன்யு காவல் நிலை​யத்​துக்​குச் சென்​று, புகைப்​படங்​கள் மற்​றும் வாங்​கியதற்​கான ரசீதுகளைச் சமர்ப்பித்தார்.
சில மணி நேர நடை​முறை​களுக்​குப் பிறகு தங்​கம் அவர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. ”து​பா​யில் குப்​பைகளைக் கண்​காணிக்க தனி அமைப்பு உள்ளது. எந்​தப் பை எந்த இடத்​தில் இருந்து வருகிறது என்​பதை அவர்​களால் துல்​லிய​மாகக் கண்​டறிய முடியும்” என்று அபிமன்யு வியப்​புடன் தெரி​வித்​தார்.