அரசுக்கு உதவ உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

Homeசெய்திகள்

அரசுக்கு உதவ உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

உலக வங்கி பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர். 2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொ

கிவுல் ஓயாத் திட்டத்தால் புதிய குடியேற்றங்கள் வரப்போவதில்லை
பிரான்சில் கைது செய்யப்பட்ட சீனர்கள் – விசாரணையில் கசிந்த இரகசிய தகவல்
ஒரு மில்லியன் பெறுமதியான அந்தூரியச் செடிகளுடன் இருவர் கைது!
செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு
அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி தொழில்களைத் தடை செய்ய முடியாது – சஜித் பிரேமதாச


உலக வங்கி பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர். 2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமைகிறது.
குறித்த திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் (David Sislen) ஆகியோர் ஏற்கனவே திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா (Kristalina Georgieva) பெப்ரவரி 17ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார்.
அவர் பெப்ரவரி 18ஆம் திகதி அன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5ஆம் மற்றும் 6வது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS