Tag யாழ்ப்பாணம்

சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும்

சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்  கிடம் கோரியுள்ளனர்.  யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர்…

ஜநா ஆணையர் சந்திப்புக்களில்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட்டுள்ளார். இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்த அவர் செம்மணிக்கு பயணித்ததுடன் அணையா விளக்கு போராட்டகளத்தில் மக்களை சந்தித்திருந்தார். முன்னதாக கொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு மௌன அஞ்சலியையும்…

அணையா விளக்கு, அடித்து விரட்டியது!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்ற ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினரை போராட்ட களத்தில் நின்ற மக்கள் கலைத்து வெளியேற்றியிருந்தனர். முன்னதாக ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே.…

நல்லூரானை வழிபட்ட ஆணையாளர்

நல்லூரானை வழிபட்ட ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார் No comments உலகம் ஐரோப்பா அதிகம் வாசிக்கப்பட்டவை ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது  குறித்த விபத்து படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா…

செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மனிதவுரிமை ஆணையாளர்

செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மனிதவுரிமை ஆணையாளர் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ” அணையா தீபம்” போராட்ட களத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட ” அணையா தீபத்திற்கு முன்பாக மலர்…

காணிகளை விடுவிக்க கோரி மயிலிட்டியில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம்

காணிகளை விடுவிக்க கோரி மயிலிட்டியில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம் யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் புதன்கிழமை ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன்,…

ஐநா மனிதவுரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்க யாழில் போராட்டம்

ஐநா மனிதவுரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்க யாழில் போராட்டம் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவலகத்திற்கு வருகை தந்த ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அலுவலகத்திற்கு…

செம்மணிக்கு சென்ற ஐ.நாமனிதவுரிமை ஆணையாளர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.  உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை வந்திறங்கிய ஆணையாளர் , முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள  IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார்.  அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும்…

ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் யாழ் வருகையில் மக்கள் போராட்டம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்றுவருகின்றது.  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இவ் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.   நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலய வீதியில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.  இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பு, செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட…

சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரும் செம்மணியில் இருந்து வெளியேற்றம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  அந்நிலையில்…