Tag யாழ்ப்பாணம்

வெளிநாட்டில் இருந்ததால் , அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை

செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது  அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள்…

மயிலிட்டி சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்க கோரிய மக்கள்

கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா , க,இளங்குமரன் , வலி. வடக்கு பிரதேச…

மக்களின் காணிகளைப் பிடித்து வைத்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாம் விரும்பவில்லை

தெற்கில் ராஜபக்சக்கள் எவ்வாறு மதவாதம், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றினார்களோ, அதையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் செய்கின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இப்போது மக்களை உசுப்பேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் என நெடுச்சாலைகள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

கீரிமலை ஜனாதிபதி மாளிகை முதலீட்டாளர்களிடமே கையளிக்கப்படும்

கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,  கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள இடத்துக்கு 8 பேர் உரிமை கோரியுள்ளனர். அதனால் அந்த மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை முழுமையாகத்…

யாழில். நீண்ட காலமாக போதைக்கு அடிமையாகியிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில். நீண்ட காலமாக போதைக்கு அடிமையாகியிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான 28 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.  புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இந்த இளம் குடும்பஸ்தர் கடந்த 27 ஆம் திகதி சுகவீனமுற்ற நிலையில் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மறுநாள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்…

யாழில். குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று இளநீர் பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று அங்கு பூசாரி வழங்கிய இளநீரை பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குடும்பஸ்தர்உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் ஆலயத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.  ஆலய பூசாரி அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர்…

வல்வெட்டித்துறையில் தன்மையில் வசித்து வந்த முதியவர் உயிர்மாய்ப்பு

வல்வெட்டித்துறையில் தன்மையில் வசித்து வந்த முதியவர் உயிர்மாய்ப்பு ஆதீரா Monday, June 30, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் , வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்த முதியவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுகின்றது என்று வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து. சம்பவ இடத்துக்குச் சென்றபோது. வீட்டுக்குள் முதியவர் தனது உயிரை மாய்த்த நிலையில்,…

வடகிழக்கு விற்பனைக்கு!

வடகிழக்கினை காண்பித்து தேசிய மக்கள் சக்தியும்  தனது கல்லா கட்டும் தொழிலை ஆரம்பித்துள்ளது.யுத்த பாதிப்பிற்குள்ளான வடகிழக்கிற்கான சர்வதேச உதவிகள் கடந்த காலங்களில் தெற்கு ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு வந்த நிலையில்தேசிய மக்கள் சக்தியும் கடைவிரிக்க தொடங்கியுள்ளது உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று இன்றைய கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது.  உலக…

வெடியன் இளங்குமரனும் நமுத்துப்போன பட்டாசுகளும்!

யாழ்ப்பாணத்து வெடியன் இளங்குமரனின் வெடிகள் நாள் தோறும் புஸ்வாணமாக வெடித்த வண்ணமேயுள்ளது.தனது முகநூலில் ஆதரவு குண்டர்கள் சகிதம் பிரச்சாரங்களை முடுக்கவிடுவது இளங்குமரனின் வழமையாகும் ஆனால் விடும் வெடிகள் ஒரு நாளிலேயே பொய்த்துப்போவது தொடர்கின்றது பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு  கட்டுப்பாடுகள் இன்றி  வழிபட அனுமதித்த இராணுவம் அனுமதி மறுத்துள்ளது.  ஏற்கனவே ஆலயத்துக்கு செல்லவென…

செம்மணி புதைகுழியில் பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பை ஒன்றும் துணி ஒன்றும்…