Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் ஐரோப்பியத் தலைவர்கள் மூன்று மணி நேர அவசர பேச்சுவார்த்தைகளை நடந்தினர். இன்று திங்களன்று பாரிஸில் அவசர பேச்சுவார்த்தைகளுக்காக கூடிய ஐரோப்பிய தலைவர்கள் கண்டத்தின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க அதிக செலவினங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தையும் ஆதரிக்க உக்ரைனுக்கு அமைதி காக்கும் படையினரை அனுப்புவது…
தரையிறங்கிய விமானம் தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கும் காட்சிஅமெரிக்கா மினியாபோலிஸிலிருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தரையிறங்கும் போது தலைகீழாக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு விமானப் பணியாளர்களும் இருந்தனர். இதில் 10 பேர் மட்டும் காயமடைந்த நிலையில்…
அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அங்கு இங்கிலாந்து துருப்புக்களை நிலைநிறுத்த தயாராகவும் விருப்பமாகவும் இருப்பதாக பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் புதின் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவது அவசியம் என்று இங்கிலாந்து பிரதமர் கூறினார். இன்று திங்கட்கிழமை பிரான்ஸ்…
சொத்து மற்றும் நிதி மோசடி தொடர்பாக மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித மற்றும் அவரது பாட்டி மீது வழக்குத் தாக்கலாகியுள்ளது. மகிந்தவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச சட்டத்தரணி பரீட்சையில் மோசடி செய்த குற்றச்சாட்டில் உயர்மட்ட விசாரணை ஆரம்பமாகியுள்ளது. நேற்றுவரை முடிந்தால் கைது செய் என்று ஆட்சித்தரப்புக்கு சவால் விட்ட நாமல், இன்று சட்டம் தங்கள்…
காகிதன் Sunday, February 16, 2025 இந்தியா, முதன்மைச் செய்திகள் உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமான மகா கும்பமேளாவிற்கு தொடருந்தில் ஏறுவதற்காக மக்கள் விரைந்து வந்தபோது, இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் உள்ள ஒரு தொடருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடல்கள்…
காசாவில் மூன்று இஸ்ரேலிய கைதிகளான அலெக்சாண்டர் ட்ருஃபனோவ் சாகுய் டெக்கல் சென் மற்றும் யைர் ஹார்ன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் 369 பலஸ்தீனர்களை இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து ஹமாஸ் அமைப்பு அடுத்த வாரம் இஸ்ரேலுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
போப் பிரான்சிஸ் வெள்ளிக்கிழமை ரோமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் தொடர்ந்து மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சை பெற்று வருவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான அவர் தனது காலைப் பார்வைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று வத்திக்கான் மேலும் கூறியது. பிரான்சிஸ் சில தேவையான நோயறிதல் பரிசோதனைகளுக்காகவும், மூச்சுக்குழாய் அழற்சிக்கான சிகிச்சையைத் தொடரவும் பாலிக்ளினிகோ அகோஸ்டினோ ஜெமெல்லியில்…
யேர்மனியின் தெற்குக மாநிலமான முன்சன் (மூனிச்) நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்க்ள கூட்டத்திற்குள் மகிழுந்து ஒன்று மோதியதில் குறைந்தது 28 பேர் காயமடைந்ததாக முன்சன் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. 20 பேர் காயமடைந்தனர். மகிழுந்து ஓட்டுநர் உனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய ஆப்கானிய நாட்டிவர் என்றும்…
பிரான்ஸ் நாட்டின் கிரெனோபில் நகரில் உள்ள ஒரு பரபரப்பான மதுபான விடுதியில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 12 பேர் காயமடைந்துள்ளர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றுப் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 20:00 மணியளவில் அக்சேஹிர் பாரில் இந்த சம்பவம் நடந்தது. தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை…
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை குறித்து மிக நீண்ட நேரம் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உண்மை என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டார். உரையாடலின் முடிவில் பேச்சுவார்த்தையை தொடங்க புடினி் ஒப்புக்கொண்டதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். உக்ரைன் பற்றி மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு, எரிசக்தி, செயற்கை…