Tag முதன்மைச் செய்திகள்

காசாவில் இருந்து 5 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

தெற்கு காசாவின் ரஃபாவில் இரண்டு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் விடுவித்துள்ளது. 40 வயதான தல் ஷோஹாம் மற்றும் 39 வயதான அவேரா மெங்கிஸ்டு ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படுவதை ஒரு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு காட்டியது.  சனிக்கிழமை காலை ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இரண்டு பணயக்கைதிகளும் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்துவிட்டதாக இஸ்ரேலிய…

இலங்கையில் தடை செய்யப்பட்ட 15 அமைப்புகள் மற்றும் 222 நபர்களின் பெயர் விபரப் பட்டியல் அறிவிப்பு

தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். குறித்த…

பெர்லினின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

யேர்மனியின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள  ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம் அருகே நடந்த கத்தி தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:00 மணிக்கு நடந்ததாக காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தனர். மேலும் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன காவல்துறையினர் தெரிவித்தனர். நினைவுச்சின்னத்தின் ஒரு பக்கத்தில் அவசரகால வாகனங்களும்…

இங்கிலாந்தில் தரவு பாதுகாப்பு கருவியை நீக்குகிறது ஆப்பிள்

பயனர் தரவை அணுக பிரித்தானிய அரசாங்கம் கோரியதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து அதன் மிக உயர்ந்த அளவிலான தரவு பாதுகாப்பு கருவியை அகற்றும் நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் எடுத்து வருகிறது. மேம்பட்ட தரவு பாதுகாப்பு, வெளிப்புறம் (ADP) என்பது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (குறியாக்கம்) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தாங்கள்…

நுழம்புகளைக் கொண்டு வருவோருக்கு பிலிப்பைன்சில் வெகுமதி அறிவிப்பு

இறந்த அல்லது உயிருள்ள நுழம்புகளை தருவோருக்கு ஒரு பரிசுத்தொகையை பிலிஸ்பைன் நாட்டின் நகர் ஒன்று அறிவித்துள்ளது.  ஆபத்தான டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வகையில் சம்பவத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர்ப் பகுதியான அடிஷன் ஹில்ஸ் நகராட்சி மன்றம் இந்த அறிவிப்பை முகநூலில் வெளியிட்டது. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து நுழம்புக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ (0.016…

அர்ச்சுனாவுக்கு எதிரான முறைப்பாடுகள்: ஆராய மூவரடங்கிய குழு நியமனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாடாளுமன்ற வரப் பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு அனுப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செயற்பாடுகள் குறித்து தமக்கு மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று…

போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம்

இரட்டை நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும் மேலும் அவரது இரத்த பகுப்பாய்வுகள் சீராக உள்ளன. அவரது இதயத்துடிப்புகள் நிலையாக உள்ளன என்று என்று செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார். போப் பிரான்சிஸின் ஒட்டுமொத்த உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும்,…

காசாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உடல் பிபாஸின் தாயாருடையது அல்ல – இஸ்ரேல்

நேற்று வியாழக்கிழமை காசாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட நான்கு உடல்களில் ஒன்று, ஹமாஸ் கூறியது போல், பணயக்கைதி ஷிரி பிபாஸின் உடல் அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களான ஏரியல் மற்றும் கிஃபிர் (அவர்கள் இப்போது ஐந்து மற்றும் இரண்டு வயதுடையவர்கள்) இறந்துவிட்டார்கள் என்ற செய்தி…

இஸ்ரேல் பேருந்துகளில் குண்டுகள் வெடித்தன

இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்ததாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர். அதிகாரிகள் இந்த சம்பவத்தை “சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது. பேட்…

போலந்தில் மோதிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் துண்டுகள்

நேற்று புதன்கிழமை பிரித்தானிய நேரப்படி அதிகாலை 03:30 மணியளவில், வடக்கு ஐரோப்பா முழுவதும் வானம் தீப்பிழம்புகளுடன் காற்றில் பெருகிச் செல்லும் ஒரு பொருளால் ஒளிர்ந்தது. ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததால் ஏற்பட்டவை. டென்மார்க், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்தில் இவற்றைப் பார்த்ததாக தகவல்கள் உள்ளன. பின்னர் ராக்கெட்டின் துண்டுகள் போலந்தில்…