Tag முதன்மைச் செய்திகள்

போப் பிரான்சிஸுக்கு இரண்டு தடைவை காற்றுப்பாதையில் அடைப்பு ஏற்பட்டது

போப் பிரான்சிஸுக்கு புதிய இரண்டு  சுவாசத் தடைகள் ஏற்பட்டதாக வத்திக்கான் தெரிவித்தது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார். 88 வயதான போப் பாண்டவர் இரட்டை நிமோனியாவிலிருந்து மீள்வதற்குப் போராடி வருகிறார். இன்று திங்கட்கிழமை அவர் இரண்டு தடவை கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது என்று புனித சீ ஒரு அறிக்கையில்…

யேர்மனி மன்ஹெய்மில் மக்கள் கூட்டம் மீது மகிழுந்து மோதியது: ஒருவர் பலி! மேலும் பலர் காயம்!

யேர்மனியின் மன்ஹெய்மில்  நகரில்  பாதசாரிகள் பகுதிக்குள் மகிழுந்து ஒன்று சென்று மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம், நகர மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய சதுக்கமான பராடெப்ளாட்ஸில் நண்பகல் நடந்தது. பாராடெப்ளாட்ஸ் திசையில் தண்ணீர் கோபுரத்திலிருந்து வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீதே அதிவேகமாகச் சென்று…

சிறந்த படம் அனோரா: ஐந்து ஆஸ்கார் விருதுகளை வென்றது

அனோரா படத்திற்கான சிறந்த நடிகை மைக்கி மேடிசன்2025 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளில் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை அனோரா திரைப்படம் வென்றது. இந்தப் படத்தை சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற சீன் பேக்கர் இயக்கியுள்ளார். மேலும், சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற 26 வயதான மைக்கி மேடிசன். அனோரா படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார்…

மருத்துவமனை படுக்கையிலிருந்து உலக அமைதிக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக நான் அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். போர் இன்னும் அபத்தமாகத் தோன்றுகிறது என்று இரட்டை நிமோனியாவுடன் போராடிவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  உலக அமைதிக்கு அழைப்பு விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை அவரது வழக்கமான மக்கள் தோன்றி பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக எழுத்துபூர்வமான உரையை வழங்கினார். உலகெங்கிலும் உள்ள மோதல்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு 88 வயதான…

உக்ரைனுக்கு முழுமையான ஆதரவு': பிரித்தானியாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் இணக்கம்!

உக்ரைனுக்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்க வேண்டும் என ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும் கனடாவும்  ஒன்றிணைந்து கூறியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சிமாநட்டில் நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்று அழைக்கப்படும் மத்திய லண்டனின் லான்காஸ்டர் மாளிகையில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் உக்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ஸ்பெயின், கனடா, பின்லாந்து,…

மன்னரைச் சந்திந்தார் ஜெலென்ஸ்கி

மன்னரைச் சந்திந்தார் ஜெலென்ஸ்கி மதுரி Sunday, March 02, 2025 பிரித்தானியா, முதன்மைச் செய்திகள் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தனது சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் சந்திப்பை நடத்தினார். மன்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிழக்கு இங்கிலாந்தில் உள்ள அவரது சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸ் எஸ்டேட்டில் வரவேற்றார் பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கை…

தேர்தலில் வெற்றி பெறவென கூறுபோட்டு விற்பனை செய்ய தமிழ்த்தேசியம் கடைச்சரக்கா? பனங்காட்டான்

தேர்தல் வெற்றிக்காக தமிழினத்தைக் கூறுபோட்டு மேடையேறிக் கடை விரிப்பதற்கு தமிழ்த் தேசியம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பதை புரிந்து கொள்ளத் தவறினால், தமிழர் தாயக மக்கள் இலங்கைத் தேசியத்துக்கு தங்களை அடகு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.   தமிழர்கள் கேட்கும் தனிராச்சியத்தை அவர்களிடம் கொடுத்துவி;ட்டால் நாங்கள் நிம்மதியாக இருக்கலாம். அவர்கள் தங்களுக்குள் அடிபட்டு கூறுபோட்டு முடித்துவிடுவார்கள் என்று…

தவறுதலாக வாடிக்கையாளர் கணக்கில் $81 டிரில்லியனை வரவு வைத்து வங்கி!!

அமெரிக்காவில் சிட்டி குரூப் (Citigroup ) வங்கி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் 280 டொலர்கள் வரவு வைப்பதற்குப் பதிலாக 81 டிரில்லியன் டொலர்கள் பணத்தை வரவு வைத்தது. இந்த பணப் பரிமாற்றம் சில மணி நேரங்களில் மீட்டு எடுக்கப்பட்டதாக பைனான்சியல் டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தப்பட்ட ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மூன்றாவது வங்கி ஊழியர்…

ராஜபக்ஷர்களின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை!

ராஜபக்ஷர்களின் ஆட்சியில்  34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும்  ஊடகவிலாளர்கள்.  கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உண்மைகளை  மூடி மறைப்பதற்கு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.  இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று  சனிக்கிழமை (01)…

அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கும் டென்மார்க் பல்பொருள் அங்காடிகள்

அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக ஐரோப்பிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதாகக் கூறி, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு பல்பொருள் அங்காடி ஐரோப்பாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு சிறப்பு லேபிளைப் பதித்துள்ளது. கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டிரம்பின் நோக்கத்தைப் டென்மார்க்கில் பலர் எதிர்க்க முற்படும் வேளையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விட நுகர்வோர் அவற்றைத் தேர்வுசெய்ய…