Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் குற்றங்களுக்காக நான்கு கனடியர்கள் சீனாவால் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கொலைகளை மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித கண்ணியத்திற்கு முரணானவை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மரணதண்டனைகளைத் தவிர்ப்பதற்கான நானும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கடந்த மாதங்களில் தலையிட்டு சீனாவிடம் கருணை கோரியதாக அமைச்சர் மெலானி…
பேர்ணில் நேற்றுப் புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் லாங்காஸ் மாவட்டத்தில் மற்றொரு வாகனத்தில் இருந்து மகிழுந்து நோக்கி நோக்கி பல முறை சுட்டதில் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவருக்கு நோயாளர் காவுவண்டி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சிகிற்சை வழங்கப்பட்ட பின்னர் உனடடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார். தற்போது காவல்துறையினர்…
மியான்மர் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ரோஹிங்கியா கிளர்ச்சிக் குழுவின் தலைவரை வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அரக்கான் ரோஹிங்கியா மீட்புப் படையின் (ARSA) 48 வயதான தலைவரான அதாவுல்லா அபு அம்மார் ஜுனுனி, கொலை மற்றும் நாசவேலைச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதால் தலைநகர் டாக்கா அருகே…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய பிறகு, உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு இலக்குகள் மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டார். ஆனால், உக்ரைன் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறிய அமெரிக்க ஆதரவுடன் கூடிய 30 நாள் போர்நிறுத்த முன்மொழிவை அவர் மறுத்துவிட்டார். இரண்டு வருடப் போரில்…
ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த நாசா விண்வெளி வீரர்களான பாரி “புட்ச்” வில்மோர் மற்றும் சுனி வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை பூமிக்குத் திரும்ப உள்ளனர். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒரு வார காலப் பயணம் நீடித்த இந்த இருவரும், செவ்வாய்க்கிழமை காலை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில்…
காசா மீது இரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 404 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 404 பேர் கொல்லப்பட்டதாக டெலிகிராமில் ஒரு பதிவில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் வாட்ஸ்அப் சேனலில், அது 413 என்ற சற்று அதிக எண்ணிக்கையைக் கூறியுள்ளது. சில…
இந்தியாவின் நாக்பூரில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசரின் கல்லறை தொடர்பாக ஏற்பட்ட வன்முறை மோதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் இன்ற செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். முன்னாள் முஸ்லிம் ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து தேசியவாதக் குழு நடத்திய போராட்டங்களின் போது இந்த மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது . தேசியவாத…
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி இன்று திங்கட்கிழமை மாலை டவுனிங் தெருவில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இங்கிலாந்துப் பிரதமர் இரண்டு இறையாண்மை கொண்ட நட்பு நாடுகளுக்கு இடையிலான உறவை வரவேற்றார். சந்திப்பின் காணொளிகளில், மன்னர் கார்னியிடம், உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் என்று கூறுவது காட்டப்பட்டது. அவர்கள் கைகுலுக்கியபோது திரு. கார்னி…
ஆபிரிக்காவில் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 ஆயுதக் குழு இன்று செவ்வாய்க்கிழமை அங்கோலாவில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. நாட்டின் கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக M23 கிளர்ச்சியாளர்கள் காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர். ஆனால் M23 குழுவை உள்ளடக்கிய கிளர்ச்சிக் குழுக்களின் காங்கோ நதி கூட்டணி, M23…
யேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள ஹெர்ன நகரில் காவல்துறையினர் ஒருவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதலாளியைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட நபர் 51 வயதுடையவர் என்றும், இன்று காலை தனது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் காட்டி விரட்டியதாகவும் செய்திகள் வெளியாகின. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அவர் தனது வீட்டின் ஜன்னல்…