Tag யாழ்ப்பாணம்

ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி

ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.  யாழ்ப்பாணம்கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,  இந்தியத்…

சுமாவின் சுயபுராண முகநூல் பிரச்சாரம்!

சுமாவின் சுயபுராண முகநூல் பிரச்சாரம்!  தேசிய மக்கள் சக்தியை கடுமையாக விமர்சித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தன்னுடைய சுய பாதுகாப்பு முன்னதாக நீக்கப்பட்டமை தொடர்பில் தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக தானே தன்னை பற்றியும் தனது பணிகள் பற்றியும் சுயபுராண முகநூல் பிரச்சாரத்திலேயே தனது பாதுகாப்பு நீக்கப்பட்டமை பற்றி தெரிவிக்கையில் பொத்துவில் முதல் பொலிகண்டி நடைபயணத்தை முன்னெடுத்தமையாலேயே நீக்கப்பட்டதாகவும்…

செம்மணி:யாருடைய புதைகுழி!

இறுதி யுத்தத்தில் சரணடைந்த முன்னாள் போராளிகள் படுகொலை செய்யப்பட்டு வடகிழக்கில் மயானங்களில் இராணுவத்தால் புதைக்கப்பட்டதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

டக்ளஸையடுத்து சந்திரசேகரின் வெடிகள்!

இந்திய  மீனவர்கள் அத்துமீறல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸினை தொடர்ந்து இராமலிங்கம் சந்திரசேகரனும் கால அவகாசம் கோர தொடங்கியுள்ளார். இலங்கை  கடற்பரப்பிற்குள்  அத்துமீறி  நுழைந்து  மீன்பிடி  நடவடிக்கையில் ஈடுபடுவதை  தடுப்பதற்கு  தேவையான  அனைத்து  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படும்.இலங்கை  கடற்படையினருக்கும்  உரிய  ஆலோசனைகள்  வழங்கப்பட்டுள்ளன.” என  தற்போதைய கடற்றொழில்,  அமைச்சர்; சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ். நெடுந்தீவு பகுதியில் முன்னாள்…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 15 ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி  அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இந்தக் கலந்துரையாடலில்…

யாழில்.பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 40 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளருக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால், உணவு கையாளும் நிலையங்கள், பூட் சிற்றிகள், பலசரக்கு வியாபார நிலையங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  அதன் போது, கோண்டாவில்…

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் இருந்து படகொன்றில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை ஊர்காவற்துறை பகுதியில் கைமாற்றப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ,குறித்த பகுதியில் பொலிஸார் கண்காணிப்புக்களை தீவிரப்படுத்தி இருந்தனர். …

விதி வலியது!

 விதி வலியதென்பது அனைவரிற்கும் தெரியும்.இராணுவ பாதுகாப்புடன் கவச வாகனங்களில் பயணம் செய்து கட்டைப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா கைது அச்சத்துடன் காலம் மோட்டார் சைக்கிள்களிலும் லாண்ட் மாஸ்டர்களிலும்  அலைய விட்டிருக்கின்றது . தீவகத்திற்கு செல்லும் போதெல்லாம் பல்லக்கில் செல்வதாக காட்டிக்கொண்ட டக்ளஸ் இன்று பினாமியான தம்பியார் தயானந்தா கூட கைவிட்ட நிலையில் திரிவது விதியே…

தேர்தல் சலுகை:பேரூந்தில் ஏறலாம்!

தேர்தல் கால அறிவிப்பாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகளை திறந்த அனுர அரசு தற்போது பேருந்து சேவைகளை பிரச்சாரங்களுடன் ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் 35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை –  பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்படடுள்ளது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக பேணப்பட்ட…

பங்காளிகள் சண்டை:மேதினம் சந்தேகம்!

அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும்  கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பங்காளிகளான இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்;ளது யாழ். ஊடக அமையத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலளர் செ.சிவசுதன் இன்று செவ்வாய்க்கிழமை  ஊடக சந்திப்பில்…