Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார். அவர் திடீரென நாடு திரும்பி தனது நிலையான வைப்பில்…
யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் மற்றும் மகனின் மகன் ஆகியோரே மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூவரும் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,…
வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன் மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் மன்னார் கடற்பரப்பில்…
சாமியின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது புகழுடல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம் , நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…
தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். வயது மூப்பின் காரணமாக பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சமூக மற்றும் சமயப் பணிகளில் எஸ்.பி. சாமி அவர்கள் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூநகரியின் வாடியடியினை நகரமயமாக்க ரணில் விக்கிரமசிங்காவால் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் நிதி அனுர அரசால் ஒரு சதமும் செலவின்றி திருப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியமைக்கு, வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக,…
கஜேந்திரன் , வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைப்பு ஆதீரா Wednesday, February 19, 2025 யாழ்ப்பாணம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி நடாத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலம் சேகரிக்க பொலிஸாரால்…
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்று முன்தினம்…
யாழ்ப்பாணத்தில் 30 கிலோ ஆமை ஒன்றுடனும் 20 கிலோ ஆமை இறைச்சியுடனும் நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் இறால் வளர்ப்பு திட்டம் பகுதியில் கடலில் இருந்து பிடித்து வரும் ஆமைகளை பாதுகாத்து, அவற்றை இறைச்சியாக்கி விற்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற…
ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம்…