Tag யாழ்ப்பாணம்

நீக்க கோருவாராம் கஜேந்திரகுமார்!

இலங்கை காணி அமைச்சினால்; வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பேச்சு நடாத்த அனுர அரசு முற்பேட்டுள்ளநிலையில் வர்த்தமானியை விலக்க கோரவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  மார்ச் 28, வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வடக்கு கடலோரப் பகுதியில் சுமார் 6,000 ஏக்கர் காணியின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அந்த காணி அரசால் கையகப்படுத்தப்படும்…

தமிழக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த வடக்கு கடல்தொழிலாளர் இணையத்தினர்

தமிழக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த வடக்கு கடல்தொழிலாளர் இணையத்தினர் யாழ்ப்பாணத்திற்கு  தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கற் யாழ்.தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரியும், அத்துமீறல்களால்…

யாழில் யுவதி கடத்தல்: தேடும் காவல்துறை

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை காவல்துறையில் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக…

யாழில் யுவதி கடத்தல்

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , யுவதியை கடத்தி சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தில் , யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் , தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க…

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் – பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.  நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் , உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.  அந்நிலையில் , அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக…

கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில்  உடனடியாக கண் சுகாதாரம்  தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் M. மலரவன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள குறித்த கடிதத்தில்,  இலங்கையின் பல்வேறு சுகாதாரக் குறிகாட்டிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு…

யாழில். IPL பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் IPL போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது-26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு உணவருந்திவிட்டு தொலைக்காட்சியில் IPL கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறிய…

தேர்தல் முடிந்துவிட்டது:இனி இனவாதம் வேண்டாம்!

வடக்கில் உள்ள காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாதென அமைச்சரான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் காணிகளை சுவீகரித்து அவற்றை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டிய தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடன் மீளப்பெற வேண்டும் என தமிழ் தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன.…

காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயம்

காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாக பிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில் வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உலக வங்கியின் குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார். உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபனை  இன்றைய தினம் புதன்கிழமை…

ஆளுநரின் உத்தரவை மீறி , வாக்குறுதி வழங்கிய பலாலி பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு  வடமாகாண ஆளுநரின் உத்தரவை மீறி , பலாலி பொலிஸார் வாக்குறுதி வழங்கியுள்ளனர்  யாழ்ப்பாணத்தில் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்தே…