Tag யாழ்ப்பாணம்

யாழ்.மாநகரசபைக்கு தொடர்ந்தும் கண்டம்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் நேற்றைய தினம் கதிரைகளை தக்க வைக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க தமிழரசுக்கட்சி தேசிய மக்கள் சக்தி பக்கம் சாயலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக யாழ் மாநகர சபையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்;…

கிருசாந்தி கொலையாளிகளிற்கு மன்னிப்பு இல்லை!

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு   ஒருமனதாக நிராகரித்துள்ளது. முதல் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்சஷ உள்ளிட்ட மனுதாரர்கள், தாங்கள் பல ஆண்டுகளாக மரண தண்டனையில்…

செம்மணி மனித பபுதைகுழி – இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.  செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.  அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள்…

பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி ஒன்றினை சேவ் ஏ லைஃப் அமைப்பினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்க உள்ளதாக நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்துள்ளார்.  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், பொலித்தீன் பாவனையால்…

சுன்னாக பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது

சுன்னாகம் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் , , பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தவர்கள் என 20 பேர் கைது…

யாழில். கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அரியாலை பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வரும் நபர் மீது நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பல் அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை…

யாழில் 22 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளுடன் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.  அதேவேளை ,…

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய முதியவருக்கு பிணை

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் , 37 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நபர் பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்று அனுமதித்துள்ளது.  உள்நாட்டு யுத்தம் காரணமாக தனது உயிரை பாதுகாப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஏழாலையை சேர்ந்த சின்னையா சிவலோகநாதன் (வயது தற்போது 75)…

அகதி கைதி விடுதலை!

இந்தியாவின் அகதி முகாமில் பல வருடம் வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் வயோதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக அகதியாக சென்றவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய வேளை கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.…

மாகாணசபை தேர்தல் வருகையில் பார்க்கலாம்!

வடகிழக்கில் உள்ளுராட்சி சபைகளில் ஆளுந்தரப்பு ஆட்சியமைக்க முடியாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆகவே ஏனையோர் ஆட்சியமைப்பது தொடர்பில் சரியான முடிவு எடுக்கப்படுமென சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை எதிர்காலத்தில் தேர்தல்களை எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையே நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையினை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி…