Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழில். வீட்டில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு ஆதீரா Wednesday, June 11, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்த பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரையை வழிபட வந்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமான கட்டப்பட்டுள்ள விகாரையில் நடைபெற்ற பொசன் சிறப்பு வழிப்பாட்டிற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை வந்த இளைஞன் ஒருவர் விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார் அதனை…
சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி…
பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அலுவலர்கள்…
பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன பொருத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும்…
தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர், தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை முதல்…
தையிட்டியில் வசிக்கும் மக்கள் தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரமே கோருகின்றனர் எனவே அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட வேண்டாம் என காணிஉரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தப்பட்ட விகாரை குறித்த விபரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றோம். பொசன் தினமான இன்றைய…
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் அந்த சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும்.என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தையிட்டி சட்டவிரோத…
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர். …
யாழ் . மாநகர சபை மேயர் ? யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்குத் திருமதி. விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைத்துள்ளது. அதேவேளை, யாழ். மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். யாழ். நல்லூரில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சியின்…