Tag யாழ்ப்பாணம்

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் – ஒரு இலட்சத்து 56ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 56ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெயகாந்தன் தலைமையிலான குழுவினர் கடந்த 19ஆம் திகதி தமது பகுதியில் உள்ள உணவகங்களில் திடீஸ் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  அதன் போது, சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களை கண்டறிந்ததுடன் ,…

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சிவ பூஜையில் கரடி புகுந்த சம்பவம்

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தை இனிவரும் காலங்களில் முழுமையாக பயன்படுத்துவேன் என ஒருங்கிணைப்பு குழு தலைவரும் , கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.  யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான தர்க்கத்தை தொடர்ந்து இடையில் நிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு…

இடையில் நிறுத்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

இடையில் நிறுத்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தை அடுத்து கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில், ஏற்பட்ட குழுப்ப நிலை காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கடும் குழுப்ப…

இரு நாட்டு மீனவர்களிடையே சந்திப்பு – யாழ்ப்பாணத்தை வந்தடைந்த தமிழக மீனவர்கள்

இலங்கை இந்திய மீனவர்களிடையிலான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்குடன் நாளைய தினம் புதன்கிழமை காலை  வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ்  ஆகிய ஐவர் கொண்ட குழு இன்றைய தினம் …

யாழில். விபத்து – தந்தை உயிரிழப்பு ; 10 மாத குழந்தை காயம்

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இளம் குடும்பஸ்தரை  முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புதிய குடியேற்றத் திட்டம், நாவற்குழியைச்  சேர்ந்த அந்தோணி றில்மன் டெனிஸ் (வயது- 44) என்பவரே உயிரிழந்துள்ளார். நாவற்குழி -பூநகரி வீதி வழியாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தவரின் மனைவி ஒரு துவிச்சக்கர வண்டியில் முன்னே செல்ல…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எம்.பிகள் தர்க்கம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நாகரிமற்ற வகையில் தர்க்கம் புரிந்தமையால், அதனை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் வெளிநடப்பு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில்…

யாழில். சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்

யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி , சித்தரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  குடத்தனை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்க சென்ற சமயம் , கடையில் இனிப்பு பொருட்களை திருடினார் என கடை…

யாழ்.மாநகரினை சூழ்ச்சியால் கைப்பற்ற சதி!

அனுர அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் வேட்பு மனு  நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு  வெள்ளியன்று தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் ஊடக சந்திப்பை மேற்கொண்டு கருத்து தெரிவித்த சுயேச்சை குழுவின் தலைவர் சுலக்சன்…

தேசியத்தில் ஆட்டம்?

யாழ்ப்பாணத்தில் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மண்டபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டமை தேசிய மக்கள் சக்திக்கு எதிரான மனோநிலையை வடகிழக்கில் தோற்றுவித்துள்ளது. தயிட்டி பகுதியில் தனியார் காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விகாரையை அகற்றி, தமது காணிகளை தம்மிடம்…

யாழில். மின்கலங்களை திருடிய கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவரும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு…