Tag இலங்கை

வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (12) நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பதிவான வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ஆரம்பமாகும் வகையில்…

படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றுக்கு ..

படலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.  அதன்படி, ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்…

பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் பட்டியல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தினால் பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துதல்…

மேலதிக வகுப்புக்களை நடாத்தினால் பொலிஸாருக்கு அறிவியுங்கள்

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கூடுதல் வகுப்புகள் நடத்தப்பட்டால், காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய காலகட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கூடுதல் வகுப்புகள் நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் – 0112421111 பொலிஸ் அவசர எண் –…

இஷாரா தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய நபர் விளக்கமறியலில்

 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி குறித்து தவறான தகவல்களை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த லஹிரு சம்பத் என்ற சந்தேகநபரை இவ்வாறு விளக்கமறியலில் தடுத்து வைக்க கொழும்பு நீதவான்…

17 கி.கிராம் போதைப்பொருளுடன் 20 வயது கனேடிய பெண் கைது

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த ரூ. 17.5 மில்லியன் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் மாணவி…

முச்சக்கர வண்டி விபத்து – குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

புத்தளம் – கற்பிட்டி, தலவில பகுதியில் இருந்து மினுவாங்கொடைபகுதியை நோக்கிப் பயணம் செய்த முச்சக்கர வண்டி ஒன்று மாதம்பை – கலஹிடியாவ பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ராகம மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32…

E-சிகரெட் வைத்திருப்போரை கைது செய்ய நடவடிக்கை

நாட்டில் E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது.  அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதற்கிடையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக…

மன்னார், பூநகரி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

மன்னார், பூநகரி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மார்ச் 26…

வீதியில் கைவிடப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை மீட்பு

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று, இன்றைய தினம் திங்கட்கிழமை  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று இருப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…