Tag இலங்கை

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அதற்கமைய, முதலாம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் மே மாதம் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது.  2025 இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் மீண்டும் மே மாதம்…

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பேரின் பெயர்களும் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தின் 6 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை  கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.  அதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களும் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைமுறைகள் தொடர்பிலும், அவர்கள் எதிர்கொள்ளும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.  ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,  உயிர்த்த ஞாயிறு…

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  அதன்படி, 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்…

உண்மையைக் கண்டறிவதற்காக அணிதிரளுவோம்

கடவுளின் குமாரனாகக் கருதப்படும் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  இயேசு கிறிஸ்து மனித இதயத்தில் உள்ள இருளை அகற்றி, புதிய நம்பிக்கையை வழங்கி, மனித வாழ்க்கையை மாற்றும் திறனை…

பிரபல வர்த்தகரை சுட்டுக் கொலை செய்ய சதி – 09 பேர் கைது

வர்த்தகரான கம்பஹா ஒஸ்மன் குணசேகர உள்ளிட்ட குழுவினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  அதன்படி, இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.  சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை  கம்பஹாவில் சந்தேக நபர்கள் இருவர் T-56 ரக துப்பாக்கிகளுடன் கைது…

விசாரணைகளை மிகவும் சூட்சுமமாக நடாத்துகிறோம்

முழுநாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  பதுளை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  எதிர்வரும் நவம்பரில் எமது அரசாங்கத்தின் இரண்டாவது பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.  அதில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.  தற்போது…

பல்டி அடித்த ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தான் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் எதிர்க்கட்சிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மத்திய அரசால் கவனமாக சேகரிக்கப்படும் நிதி ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படாது என்று மட்டுமே கூறியதாகக் கூறினார் – NPP கட்டுப்பாட்டில் உள்ள சபைகள்…

தமிழரை ஒருபோதும் கைவிடவேமாட்டோம்

“எமது கட்சியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்கள், கடந்த இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள்.  இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத்…