Category tamil news

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய வேண்டும்! – Global Tamil News

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் எனவும் , தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள்,…

பிள்ளையான் + இனியபாரதி + சகாக்களின் கைதுகளும், வெளிவரும் உண்மைகளும்! – Global Tamil News

கொலை உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (7ஆம் திகதி) கல்முனை காவற்துறைப்…

மஹேஷி விஜேரத்னவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது! – Global Tamil News

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம்…

செம்மணி மனிதப் புதைகுழிக்கு அருகில் அகழும் இடங்களிலும் மனித எலும்பு சிதிலங்கள்! – Global Tamil News

செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சிதிலங்களாக காணப்படுவதனால்,அடையாளப்படுத்துவதில், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை செம்மணியில் இன்றைய தினம் திங்கட்கிழமை  மேலும் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட…

செம்மணி புதைகுழி பிரதேசம் குற்ற பிரதேசமே! – Global Tamil News

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (07.07.25) முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார். ஏற்கனவே…

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு உதவித்தொகை! – Global Tamil News

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (07.07.25) நடைபெற்ற இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ந. தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் வைலட் நிக்லஸ் மற்றும் OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர்…

நயினாதீவு தேர்த்திருவிழா! – Global Tamil News

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை (09.07.25)  காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில்…

துமிந்த திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு! – Global Tamil News

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (7) அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம்…

நரம்பியல் நிபுணரின் மகளும் கைது! – Global Tamil News

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் ஆலோசகர் வைத்தியர் மகேஷி சூரசிங்க விஜேரத்னவின் 21 வயது மகள், கெசல்வத்த காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை மிரட்டியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். அவர் கொழும்பு…

பாதாள உலகக் குழுவிடமிருந்து கொலை மிரட்டல் என்கிறார் டிரான் அலஸ்! – Global Tamil News

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இது தொடர்பில் அவர் பதில் காவற்துறை மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுமக்கள்…