Category tamil news

மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை – 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழப்பு – Global Tamil News

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ற்  ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். நெக்ஸ்ற்   தொழிற்சாலையின் நிர்வாகம்  எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்தநிலையில் அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால…

கெஹெலியவின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை! – Global Tamil News

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். “ஊழல் குற்றத்தைச் செய்ததாக” இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு…

பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்! – Global Tamil News

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவின் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “கடந்த வார இறுதியில், இலங்கையில்…

முன்னாள் அரசியல் பிரமுகர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு! – Global Tamil News

முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள் 10 சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.…

துவிச்சக்கர வண்டிகளை திருடியவா் ஹெரோயினுடன் கைது – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவர்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை.கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது உடைமையில் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளும், ஆண்கள் பயன்படுத்தும் 5 துவிச்சக்கர வண்டிகளும் , பெண்களின் 11 துவிச்சக்கர வண்டிகளுமாக 16 துவிச்சக்கர வண்டிகள்…

நல்லூர் சூழலில் அமைந்துள்ள அசைவ உணவகத்தினை அகற்றக் கோரி போராட்டம் – Global Tamil News

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக ஆரம்பித்த பேரணி யாழ் மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது. இதன்போது யாழ் மாநகர சபைக்கு முன்பாக திறக்கப்பட்ட அசைவ கடைக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள்…

காணி சுவீகரிப்பு – தமிழர் தேசத்தின் மற்றொரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை – Global Tamil News

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட,…

ஆளுநரின் பணிப்பை அடுத்து 769 வழித்தட தனியார் பேருந்து சாரதிகள் பணிப்புக்கணிப்பு – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் நாளை புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.  மயிலிட்டிப் பகுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் கடந்த காலங்களில், வசாவிளான்…

இலங்கைக்கு கடத்தவிருந்த பெறுமதிமிக்க சுறா துடுப்புகள், சுக்கு, செருப்பு – Global Tamil News

மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் பகுதியில் கொலை தொடர்பாக ஒருவரை தேடிச் சென்ற போது கடற்கரை அருகே வீட்டின் பின்புறம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த .50 லட்சம் மதிப்புள்ள சுறா துடுப்புகள், சுக்கு, செருப்பு அடங்கிய 23 சாக்கு பண்டல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தனிப்பிரிவு காவல்துறையினர்  இன்று (20)  பறிமுதல் செய்துள்ளதுடன்  வீட்டின்…

764 – 769 ஆகிய வழித்தட பேருந்துகள் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில்ிருந்து சேவைகளை ஆரம்பிக்காவிட்டால்  சட்டநடவடிக்கை  – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை நாளை புதன்கிழமையிலிருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்குமாறும் அதை மீறிச் செயற்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில் 764 மற்றும் 769…