Category tamil news

அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மடக்கி பிடிப்பு – Global Tamil News

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களை நேற்றைய தினம் சனிக்கிழமை  காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.  கிளிநொச்சியில் இருந்து அனுமதி பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த மூன்று டிப்பர் வாகனங்களையும் சங்குப்பிட்டிப் பாலத்திற்கு அருகில் வைத்து காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். அதனை அடுத்து அதன்…

நல்லூரானுக்கு திருக்கல்யாணம் – Global Tamil News

வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய நேற்றைய தினம் சனிக்கிழமை  மாலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்று சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக தண்டிகையில் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்

கேதீஸ்வரம் கொடிசீலைக்கு களஞ்சி வழங்கும் நிகழ்வு – Global Tamil News

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயகத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று காலை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை…

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை! – Global Tamil News

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல்…

“இலங்கை சினிமாவின் ராணி” மாலினி பொன்சேகா காலமானார்! – Global Tamil News

சிங்கள திரையுலகின்  பிரபல நடிகையும், நாடகக் கலைஞரும், இயக்குநருமான “இலங்கை சினிமாவின் ராணி” என்று  கருதப்படும் மாலினி பொன்சேகா இன்று (24.05.25) அதிகாலை காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 78 ஆவது வயதில் காலமானார். யார் அவள் (1976, மொழி மாற்றத் திரைப்படம்)…

270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர்  இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.  காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  இருவரையும் கைது செய்தகாவல்துறையினர் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து 270 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயதுடைய மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் , இருவரையும்  காவல்நிலையத்தில் தடுத்து…

“இலங்கைக்கான பாடங்கள்” – சீன நாட்டு பேராசிரியர் யாழில் சிறப்புரை – Global Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சிறப்புரை இடம்பெற்றது. “சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் முழுமையான வறுமை ஒழிப்பு: இலங்கைக்கான பாடங்கள்” எனும் தலைப்பில் குறித்த உரை நிகழ்த்தப்பட்டது.…

புங்குடுதீவு அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்? – Global Tamil News

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அடியவர்கள் அன்பளிப்பாக கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்களை திருடியது யார் ? என கேட்டு  , ஆலய பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்  வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் இடம்பெற்றது. அதன் போது, ஆலயத்தின் தற்போதைய நிர்வாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும்.…

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது! – Global Tamil News

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் காவற்துறையினரால்   செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன காவல்  நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒருவரின் இரண்டு குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் காவற்துறையினர் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் காவல் …