Category tamil news

அல்பேனியாவில் 3 இலங்கையர்கள் கைது – Global Tamil News

  போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவா்கள்  இத்தாலியில் வழங்கப்பட்ட  குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும்,  அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்கள்  36, 51 மற்றும் 57 வயதுடைய 3    அலஙடகையா்கள் எனத் தொிவிக்கப்படுகின்றது. …

நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு – Global Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும்…

யாழ். கோட்டை மற்றும் பழைய கச்சேரியை மரபுசார் சுற்றுலா தளமாக விருத்தி செய்ய நடவடிக்கை! – Global Tamil News

யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்ற வற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்வது தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் யாழ் . மாவட்ட செயலர் எடுத்து கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்டுகட்டுமாணம் மற்றும் சுற்றுலா துறைகளை விருத்தி செய்வது தொடர்பில் தற்போதய அரசாங்கத்தின் கோரிக்கையின்…

சமைக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்த வேளை ஆடையில் தீ பற்றியமையால் படுகாயமடைந்த இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த 20 ஆம் திகதி வீட்டில் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அடுப்புக்கு மண்ணெண்ணெய்…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை! – Global Tamil News

யாழ் . மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகரவிற்கு மாவட்ட செயலர் எடுத்து கூறியுள்ளார். தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து  கலந்துரையாடினார்.…

இன்றைய பிள்ளைகள் அதிகமாக அலைபேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை – Global Tamil News

மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்.பாடி சதுரங்கச் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை பிரதேச செயலர்…

 இந்திய-இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு. – Global Tamil News

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர்   கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் இன்று திங்கட்கிழமை (26) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம்…

28 இலட்சம் மோசடி செய்த பெண் கைது – Global Tamil News

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில்  பெண்ணொருவரை வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80…

யாழ்.போதனாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் – Global Tamil News

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை தாயொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரசவித்துள்ளார்.  யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே  ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்துள்ளாா்.   ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது Spread the love   ஆரோக்கியம்குழந்தைகள்யாழ்.போதனா

ACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு! – Global Tamil News

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகள்  பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று (25.05.25) இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த …