Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரபல நடிகர் ராஜேஷ் இன்று (29) காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராஜேஷ் தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அவா் . டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல தொடா்களில் முக்கிய…
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தகர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ஆம்…
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் 39 வயது தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், இன்று வியாழக்கிழமை (29.05.25) முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். கப்பல் கப்டனாக பணிபுரியும் 49 வயதான இவர்…
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார். அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் ட்ரம்ப் வரி விதித்தார். ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட…
யாழ்ப்பாண பண்பாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம் நேற்றைய தினம் (29.05.25) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே மாவட்ட செயலர் ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய…
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு E – Personal File தொடர்பான பயிற்சி நெறி உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி தலைமையில் நேற்றைய தினம் (29.05.25) புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு நடைபெற்றது . இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு…
பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (29.05.25) புதன்கிழமை உயிரிழந்துள்ளார். புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார் கடந்த 23 ஆம்…
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் 2 ஆம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷானின் மரணம் தொடா்பான சம்பவமானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்வும்,அது தொடா்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் எனவும் கோரி, இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மேலும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச…
மன்னார் மாவட்டத்தில் காற்று,கனிய மணல் போன்ற வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம் என கூட்டுறவு பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (28) மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கான உத்தியோகபூர்வ…
தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அடையாளம் காணப்படாத ஒருவரின் பாதி எரிந்த உடல் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற புளத்சிங்கள காவல் நிலைய காவல்துறையினா் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.…