Category tamil news

தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் – Global Tamil News

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம் என தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளனர். தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது.…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை – Global Tamil News

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட  தகுதிகாண் விமான சேவை இன்றைய தினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையதிற்கு சேவையில் ஈடுபட்டது. .   இலங்கை விமான சேவைகள் அதிகார சபை தலைமை அதிபதி கப்டன் தமிந்த றம்புக்வெல கருத்து தெரிவிக்கையில், இரண்டு வருடங்களின் பின்னர்…

தமிழ் தேசிய பேரவை -ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து – Global Tamil News

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.  தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர்…

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை! – Global Tamil News

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் ரூ 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக…

அல்வாய் படுகொலை நிகழ்வின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்! – Global Tamil News

வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட’லிபரேசன் ஒபரேசன்’ எனும் இராணுவ நடவடிக்கையின் போது 1987 மே 26 முதல் 31 வரை இடம்பெற்ற அல்வாய் படுகொலை நிகழ்வின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி – மாலைசந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளது. ‘லிபரேசன் ஒபரேசன்’ இராணுவ நடவடிக்கையின் போது ஆலயங்கள், பாடசாலைகளில்…

அச்சுவேலியில் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள் – 97 கோழிகள் உயிரிழப்பு! – Global Tamil News

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு கோழிகளுக்கு விஷமிகள் விஷம் வைத்தலால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் , பல கோழிகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வளலாய் மேற்கு பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று , தமது வாழ்வாதாரத்திற்காக கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கோழி கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிகளுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை  (31.05.25)விஷமிகள்…

புறக்கோட்டையில் தாக்குதல் – 6 இராணுவசிப்பாய்கள் கைது! – Global Tamil News

புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகில் குடிபோதையில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆறு இராணுவ சிப்பாய்களை கைது செய்துள்ளதாக புறக்கோட்டை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மருதானை காலாட்படை பிரிவைச் சேர்ந்த 29 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு இராணுவ சிப்பாய்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு இராணுவ சிப்பாய்களால் தாக்கப்பட்ட நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பிரபாவின் மகனும் உயிரிழப்பு! – Global Tamil News

ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான ச.பிரபாகரனின் மகனும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.05.25) உயிரிழந்துள்ளார். நல்லூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் அக்ஷே என்பவரே உயிரிழந்துள்ளார். தனது தனிப்படட காரணத்திற்காக குடும்பத்தினருடன் வட இந்தியாவிற்கு…

அனலைதீவு ஐயனார் கோவிலில் கலசங்கள் திருட்டு – ஒருவர் கைது – 6 கலசங்கள் மீட்பு! – Global Tamil News

யாழ்ப்பாணம் அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,  அவரிமிருந்து 06 பித்தளை கலசங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐயனார் கோவிலில் இருந்து பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன. அது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை…

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம் – Global Tamil News

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து எதிர்வரும் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 09ஆம் திகதி  திங்கட்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், மறுநாள் 10ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். Spread the…