Category tamil news

காங்கேசன்துறையில் எரிபொருள் களஞ்சிய சாலை! – Global Tamil News

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலையில் எரிபொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய…

தமிழரசின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்! – Global Tamil News

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் உறுப்பினர்களின்  சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாகாண…

எங்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் எங்களை “லவ்” பண்ணுகின்றனர்! – Global Tamil News

தேசிய மக்கள் சக்தியினை யாழ்ப்பாணத்தில் பல அரசியல்வாதிகள் லவ்வாக பார்க்கின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டவரிடம் , யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு யாருக்கு என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை …

யாழில்.தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்! – Global Tamil News

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற  உறுப்பினர்களின்    சத்தியப்பிரமாணம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொற்பதி அறிவாலயம் மண்டபத்தில் கட்சியின் உப செயலாளர் வி. மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். அத்தோடு  அக்கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான கலந்துரையாடலும் நடைபெற்றது. Spread the love…

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது! – Global Tamil News

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36  வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேக நபரிடம் 29 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர், நாடளாவிய ரீதியில் நடந்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கையுடன் தொடர்புடையவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். Spread the love   ஆயுதங்களுடன் ஒருவர்…

ஆற்றில் மூழ்கி நால்வா் உயிாிழப்பு – Global Tamil News

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள  அரலகங்வில  காவல்துறையினா்      மேலதிக  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Spread the love   அடையாளம்ஆற்றில் மூழ்கிஇரத்மலானைபொலன்னறுவை

செம்மணி புதைகுழியை கண்காணிக்க நீதிமன்றில் அனுமதி பெற வேண்டும் – Global Tamil News

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட விரும்புவோர் , கண்காணிக்க விரும்புவோர் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் விண்ணப்பம் செய்யுமாறு நீதவான் தெரிவித்துள்ளார். செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில்…

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில் – Global Tamil News

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

இலங்கைக்கு கடத்துவதற்காக  பதுக்கி வைக்கப்பட்டிருந்த   50 கிலோ கஞ்சா மீட்பு-6 பேர் கைது:  – Global Tamil News

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று சனிக்கிழமை(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம் இந்திய  மதிப்பிலான 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால்…