Category tamil news

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் அஞ்சலி செலுத்தினார்! – Global Tamil News

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட  32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலித்தியுள்ளார். 1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர். அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டவர்களின்…

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி , கனிய மணல் அகழ்வுக்கு எதிராக பேரணி! – Global Tamil News

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ்…

தையிட்டி காவற்துறை வசம்! – Global Tamil News

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் (10.06.25) செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர், தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை முதல்…

தையிட்டிக்கு சென்று இனவாதத்தை தூண்டாதீர்கள்! – Global Tamil News

தையிட்டியில் வசிக்கும் மக்கள் தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரமே கோருகின்றனர் எனவே  அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட வேண்டாம் என காணிஉரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தப்பட்ட விகாரை குறித்த விபரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றோம். பொசன் தினமான இன்றைய…

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது! – Global Tamil News

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் நேற்று  (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர், ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான…

ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்! – Global Tamil News

கடந்த ஆண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சில சிறைச்சாலைத் கண்காணிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள் குறித்து CID சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட அனுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்ன…

தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும்! – Global Tamil News

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் அந்த சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தையிட்டி…

தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை! – Global Tamil News

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10.06.25)  நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து…

குவலயம் மீதினில் கொண்டாடும் வாழ்வு! – Global Tamil News

குவலயம் மீதினில் கொண்டாடும் வாழ்வு வாவிகள் கடந்து வயல்வெளி திரிந்து வீதிகள் வளவுகள் எல்லாமும் நிறைத்து முற்றங்கள் மகிழ வாசல்கள் கடந்து வீடுகள் எல்லாமும் நிறைந்திடும் மகிழ்வு தொன்மைத் தமிழரின் தொல்லிசை மொழியாம் சொர்ணாளி ரீங்காரம் செவிகளில் நிறைக்க கூடி முழங்கிடும் குதித்தாட வைத்திடும் ஆதித்தமிழ் லயம் பறையொலி முழக்கம் எங்கும் நிறைந்திட எதிலும் உறைந்திட…

சிறைச்சாலை ஆணையாளர் இடைநிறுத்தம்  – Global Tamil News

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து  அவா் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டார். Spread the love   இடைநிறுத்தம்சிறைச்சாலை ஆணையாளர்துஷார உபுல்தெனிய