Category tamil news

காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்! – Global Tamil News

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார். காரைநகர்  பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை  வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில்…

தமிழரசு கட்சியின் உறுப்பினர் நீக்கம் ?? – Global Tamil News

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரம் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச்…

வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்! – Global Tamil News

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு நேற்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11…

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் கெஹெலிய குடும்பம் சிறை வைக்கப்பட்டனர்! – Global Tamil News

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் ரம்புக்வெல்ல மற்றும் மகள் அமலி ரம்புக்வெல்ல…

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையர் இருவர் கைது! – Global Tamil News

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த திங்கட்கிழமை ( 16.06.25) சென்னையில் தரையிறங்கினர், இந்திய குடியேற்ற அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​48 வயது பெண்ணும் அவரது 21 வயது மகளும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டுகளை…

வலி வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்! – Global Tamil News

யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸூக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன்…

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் கோட்டையை பார்வையிட்டார்! – Global Tamil News

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் யாழ்ப்பாணத்திற்கு வியணம் செய்த நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு சென்று கோட்டையை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது Spread the love   பிரிட்டன் தூதுவர்யாழ்ப்பாண கோட்டை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும் சங்கு + சைக்கிள் வசமானது! – Global Tamil News

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச…

முருங்கனில் பேருந்தில் பயணித்த மாணவி மீது இராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை! – Global Tamil News

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்  பாலியல் சேட்டை மேற்கொண்ட  நிலையில்,குறித்த சிப்பாயியை முருங்கன் காவற்துறையினர்  கைது செய்துள்ளனர். இன்று புதன்கிழமை (18.06.25)) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி மடு பகுதியில் இருந்து…

கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை கூட்டு முயற்சியின் வெற்றி! – Global Tamil News

கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், தனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும் என்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார். இன்று (18.06.25) காலை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், மக்களின் பங்கேற்புடன் கொழும்பின் பிரச்சினைகளைத் தீர்க்க நம்புவதாகவும் அவர்…