Category tamil news

நண்பர்களுக்கிடையிலான வாய் தர்க்கம் கொலையில் முடிந்தது! – Global Tamil News

நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி நண்பர்க்ளுடன் விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த வேளை, ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால், நண்பர் ஒருவர் மண் வெட்டி பிடியால் குறித்த நபரை…

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! – Global Tamil News

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,…

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு! – Global Tamil News

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு செய்யப்பட்டார். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்  பாபு தேவ நந்தினி தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில்…

யாழ் . மாவட்ட பதில் செயலராக கடமையாற்றிய பிரதீபனுக்கு நிரந்தர நியமனம்! – Global Tamil News

யாழ்ப்பாண மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 2024 மார்ச் 09 ம் திகதி முதல் பதில் மாவட்ட செயலராக கடமையாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் செயலராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகினார் பிரதியமைச்சர் ஹர்ஷண! – Global Tamil News

நாடாளுமன்ற  உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த பதவி விலகல்  ஜூன் 20 (இன்று)  முதல் அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற  செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற  உறுப்பினராக தற்போதைய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, நிதி…

பின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது!

வடமாகாணத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் எந்தவொரு பாடத்துக்கும் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது எனவும் அதை உறுதிப்படுத்தவேண்டியது வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பொறுப்பு என வடமாகாண ஆளுநர் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில்…

உயிரிழந்வர்களுக்கு நீதியும் , வாழ்வோருக்கு உண்மையும் தேவை! – Global Tamil News

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20.06.25)  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் , பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர். அதேவேளை வடக்கில் மனித புதைகுழிகள்…

வன்னியின் இசைத் தென்றல் நிகழ்ச்சி கிளிநொச்சியில்! – Global Tamil News

கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்து கொள்ளவுள்ள மாபெரும் இசை கொண்டாட்டம் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இலங்கையின் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்” இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. ஈழத்தின் புகழ் பூத்த இசைக்குழுவான சாந்தன் இசைக்குழுவின் இசையில் தென்னிந்திய பிரபல பாடகர்களான  சத்தியன் ,…

ஊர்காவற்துறை பிரதேச சபையும் தமிழ் தேசிய பேரவை வசமானது! – Global Tamil News

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக திருவுளசீட்டு மூலம் அன்னலிங்கம் அன்னராசா தெரிவாகியுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20.06.25) வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 13 ஆசனங்களை கொண்ட பிரதேச சபையில் , தமிழ் தேசிய பேரவை…