Category tamil news

யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் கடற்படையினர் ஈடுப்பட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்தை படகை வழிமறித்து சோதனையிட்டனர். அதன்போது படகில் 250 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டதை அடுத்து, அதனை மீட்ட கடற்படையினர், படகில் இருந்த மூவரையும்…

பேசாளையைச் சேர்ந்த மூவர் தனுஷ்கோடியில் தஞ்சம்! – Global Tamil News

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் சுற்றித் திரிந்த இலங்கையர்கள் மூவரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அப்போது அவர்கள் இலங்கை பேசாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும்  காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அகதிகளாக வந்த 3 பேர் மீது…

ஷானி அபேசேகர CIDயின் பணிப்பாளராக நியமனம்! – Global Tamil News

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய காவற்துறை  ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போர்க்குற்றங்கள் தொடர்புடைய பொறுப்புக்கூறல்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு! – Global Tamil News

பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக அமெரிக்க நிதி வழங்கல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. நிதியுதவியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்…

ட்ரம்பிற்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்புகளை வழங்கியது! – Global Tamil News

அமெரிக்க உச்ச நீதிமன்றம் 6-3 என்ற வாக்கு வித்தியாசத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு ஆதரவாக முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்புகள், கூட்டாட்சி நீதிபதியின் தடைகளுக்கு எதிரான ட்ரம்பின் ஆட்சேபனையை ஆதரிப்பதுடன், பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை (birthright citizenship) தொடர்பான சட்டத்தை நாடு முழுவதும் தடை செய்யும் கூட்டாட்சி நீதிபதிகளின் முடிவுகளை கட்டுப்படுத்துகிறது. மேலும்,…

யாழ் . மாநகர சபையில் பெரும் அமளி – உறுப்பினர்கள் முதல்வரை தடுத்தனர்! – Global Tamil News

யாழ்ப்பாண மாநகர சபையின் நியதிக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஒருமித்த கருத்து இன்மையால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.06.25) நடைபெற்ற விசேட அமர்வில் குழப்பம் ஏற்பட்டது. கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, இன்றைய தினம் முதல்வர் மதிவதனி தலைமையில் விசேட அமர்வு ஆரம்பமானது. கடந்த வாரம் சுகாதாரக் குழு உறுப்பினர் தேர்வில்…

இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளன! – Global Tamil News

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய  அகழ்வு பணிகளின் போது இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை நேற்றைய…

பலாலி சந்தையை விடுவியுங்கள்! – Global Tamil News

யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில், எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள், அவர்களை மீள்குடியேற்றுவதற்காக எங்களுடைய சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்காக அனைவருடைய ஒத்துழைப்பும்…

 வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்! – Global Tamil News

நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். யாழ் . மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.06.25) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த விSet featured imageவசாயிகள் , அதனை தொடர்ந்து…

வடமராட்சி கிழக்கில் கடல்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை! – Global Tamil News

வடமராட்சி கிழக்கில் கடல்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை – சட்டவிரோத தொழிலாளிகளினால் ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி கரை திரும்பாத நிலையில் சக தொழிலாளிகள் அவரை கடலில் தேடி வருகின்றனர் மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே காணாமல் போயுள்ளார். மணல்காட்டில் இருந்து நேற்றைய தினம்…