Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் ஒரு சிரட்டை கஞ்சி என்பது வெறும் சடங்கு அல்ல. அது சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக எம் இனம் முன்னெடுக்கின்ற அமைதிவழிப் போராட்டம். மக்கள் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கைகளில் சிக்குண்டு எவ்வகையான அழிவுகளுக்கு முகங்கொடுத்தார்கள், அவ் அழிவினையே தங்கள் போராட்டத்தின் அடையாளமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதற்கான அடையாளமாக சிரட்டைக் கஞ்சி உருவகம் பெற்றுள்ளது.…
வவுனியா மாநகர சபையில் ஒரு வட்டாரத்திலும் வெற்றி பெறாது இலங்கை தமிழரசு கட்சி படுதோல்வியடைந்துள்ளது நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வவுனியா மாநகர சபையில் ஒரு வட்டாரத்தில் கூட நேரடியாக வெற்றி பெறாது பின்னடைவைச் சந்தித்துள்ளது. வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியை பின்தள்ளி…
ஆதீரா Tuesday, May 06, 2025 வவுனியா வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து திருடப்பட்ட 35 பவுண் தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கொக்குவெளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து , மேற்கொண்ட விசாரணைகளின்…
நாளைய தினம் வாக்களிப்பு :இன்று அச்சுறுத்தலாம்! தூயவன் Monday, May 05, 2025 வவுனியா நாளைய தினம் வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் வவுனியாவில் வேட்பாளர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (05.05) முறைபாடு செய்துள்ளார். வவுனியா மாநகரசபையில், வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே தனக்கு…
தேர்தல் முறைகேடுகள் மூலமேனும் வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்ற தேசிய மக்கள் சக்தி முற்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவில் கடை ஒன்றில் இருந்து வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் இருந்து ஒரு தொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், தபால்…
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட…
வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு தமிழரசு கட்சியே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இன்று வட மாகாணத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சியே ஆகும். அவர்களின் செயற்பாடு தான் இன்று ஏழு…
வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு இன்று (27.04) நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம்- நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.…
சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் ஆலோசனை வழங்கியுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆனையிறவு உப்பு விடயத்தில் பெயரை பார்க்க வேண்டாம். சுவையை பாருங்கள் எனக் கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி…
அநுரகுமார திஸாநாயக்கவின் வருகையை முன்னிட்டு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தடையுத்தரவு கோரிய வவுனியா காவல்துறையினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அனுர நாளை வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் தெரிவித்து காவல்துறையினர் குறித்த…